Thursday, December 27, 2007

என் குட்டிதேவதை


சொருகிய கண்களோடு

கருகிப்போன தன் சிறகுகளை

குப்பையில் தேடிக்கிடந்தாள்

என் குட்டிதேவதை!

பட்டினியிலொட்டிய ஓநாய்

வயிற்றுடனிருந்த அவளின்

வெளுத்த முகத்தின்

கண்ணீர்க் கோடுகளை

ஈக்கள் மொய்த்திருந்தன!

இதையெல்லாம் பார்த்தும்

பாராமல் செல்லும் நீ!

பூந்தளிர்மொட்டை மேயும்

புழுவாகப் போகக்கடவது!

5 comments:

  1. en kuttipisasu endru vachchi irukkalam

    ReplyDelete
  2. பாராட்டுகள் குட்டி ;)

    ReplyDelete
  3. கோபி,

    அடிக்கடி நீங்களாவது வந்து கண்டுகிறீங்களே!! இல்லாட்டி இடுகை போட்ட எனக்கே மறந்துடும்.

    நன்றி!!

    ReplyDelete
  4. நல்லா இருக்கு. கடவது என்ன, இப்போதே பூந்தளிர் மொட்டை மேயும் புழுக்கள் தாமவை.

    அனுஜன்யா

    ReplyDelete

ClickComments