Thursday, December 27, 2007

என் குட்டிதேவதை


சொருகிய கண்களோடு

கருகிப்போன தன் சிறகுகளை

குப்பையில் தேடிக்கிடந்தாள்

என் குட்டிதேவதை!

பட்டினியிலொட்டிய ஓநாய்

வயிற்றுடனிருந்த அவளின்

வெளுத்த முகத்தின்

கண்ணீர்க் கோடுகளை

ஈக்கள் மொய்த்திருந்தன!

இதையெல்லாம் பார்த்தும்

பாராமல் செல்லும் நீ!

பூந்தளிர்மொட்டை மேயும்

புழுவாகப் போகக்கடவது!

Monday, December 24, 2007

மழையோடு உறவாடு



பனி முட்டைகளாய்

முற்றத்தில் வீழ்ந்தபோது

வினைப் பின்னமில்லா

விடலைப் பருவத்திலே

முத்துக்களாய் சேகரித்தேன்!

சன்னலில் சாறலாய்

முத்தங்கள் பதித்தபோது

உடைந்த துளிகள்

உலர் உள்ளத்தை

நனைத்தது உணர்ச்சியால்!

தோட்டத்தில் தூறலாய்

பூவிதழில் பொதிந்தபோது

தழுவாத தருணங்கள்

எண்ணிய தவிப்புகளெத்தனை!

சாப்ளின் சொன்னதுபோல்

உன்னோடு உறவாடும்போது

உப்புநீர் உமிழும்

என்றும் என் கண்ணோடு!

Saturday, December 22, 2007

கலையட்டும் மௌனம்



கடந்தகால சப்தங்களுக்கு

அர்த்தங்கள் கற்பித்து

துணையிழந்த தனிமையில்

வெறுமை காணாதே!

நீ செல்லும் பாதையில்

மலர்கள் எத்தனையோ!

பூப்பவை ஒருநாள்

உதிரும் இது நியதி!

முடிந்த கதைக்கு முன்னுரை

எழுதவில்லை நான்

முடியாத உன் துன்பங்களுக்கு

முற்றுப்புள்ளியாய் நான்!

தொலைட்டும் இறுக்கம்

கலையட்டும் மௌனம்!

பூக்களில் உறங்கும் மௌனங்கள்


மரத்தின் விரலில்

செடியின் மடியில்

மலர்ந்த உங்கள்

மௌனங்களே மொழி

வார்த்தைக்கு வஞ்சனை!

அழகின் அமைதி

கைம்பெண் புன்னகை!

மலர்ச்சியின் ஒலி

கனவின் ஊமைத்தனம்!

மாலையில் தூக்கிலிட்டு

மரணத்தில் மடிந்து

இதழை இழந்து

இறப்பிலும் நிசப்தம்!

வெற்றிடத்தில் விஞ்சியது

மௌனம் மட்டுமல்ல

சிலநிமிட மணமும்தான்

முடிவில் நீயும் ஒரு

அழகியல் வெறுமை!!

('நச்' கவிதைப் போட்டிக்கு இதனை சமர்ப்பித்து, போட்டியில் பங்கெடுத்த பெருமையாவது கொள்கிறேன்!!)

Wednesday, December 19, 2007

அழகின் மிருகம்


இசையை யேற்காமல்

மனக்கோப்பை கவிழ்த்துவிட்டு

மலரப்போகும் மொட்டுக்களை

கடித்துத் துப்பியபடி

சுற்றித்திரிந்த என் மிருகம்!

அவள் கண்ணீரின் கதகதப்பில்

அரவணைப்பின் உறைவிடத்தில்

சற்றுநேரம் உறங்கிப்போனது!

லதாமங்கேஷ்கர் பாடலுக்கு ஹெலனின் நடனம்!

1960-களில் ஜேம்ஸ்பாண்ட் படதாக்கங்களால் திரையுலகை அதிகம் ஆக்கிரமித்து இருந்த மேற்கத்திய பாணி களியாட்ட நடனங்களின் ரசிகர்கள் வெகு அதிகம். ஹிந்திதிரப்படவுலகில் ஹெலன் இத்தகைய நடனத்திற்கு மிகவும் புகழப்பட்டவர். லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால் இசையில், 1968-ல் வெளிவந்த "Intquam" என்ற திரைப்படத்திற்காக லதா மங்கேஷ்கர் பாடிய பாடல். விடுதியின் கேப்ரெட் களியாட்டப் பாடலுக்கு ஹெலன் ஆடியிருக்கிறார். உங்கள் ரசனைக்காக இதோ அப்பாடல்....!!

Saturday, November 24, 2007

தற்கொலை...!!



மலர்களின் கலப்புத்திருமணம்

மகரந்தசேர்க்கை...!

தூதுவண்டிற்கு கண்டனம்

தூக்குத்தண்டனை பூவிற்கு

மாலைகளாக...!

வைரமுத்துக்கு ஏன் கோபம்?

பாரதியின் கம்பீரம் அவரின் கண்களில் உண்டு. மீசையில் உண்டு. குரலில் உண்டு. வார்த்தைகளில் உண்டு. ஆனால் பாரதி பல பேருக்கு கொடுத்த தன்னம்பிக்கையை அவர் சொன்ன ஒரேயரு கருத்து முடக்கி போட்டதை அந்த விழாவில் கேட்க முடிந்தது.

நான் எழுதிய பாடல்களை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதே இல்லை. காரணம் அவ்வளவு பயமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான பாடல்களை நான் எழுதினாலும், படமாக்கியதில் எனக்கு பிடித்தது சில பாடல்கள்தான் என்று நான்கே நான்கு பாடல்களை பட்டியலிட்டார் அவர். அப்படியென்றால் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு உருவம் கொடுத்த இயக்குனர்களின் திறமை, வெறும் வெற்று பிம்பங்கள்தானா? ஒரு பாடலை நினைக்கிற நேரத்தில், நினைக்கிற இடத்தில் எழுதிவிட முடியாது. அது ஒரு பிரசவம் என்பதை பலமுறை பதிவு செய்திருக்கிறார் இவர். புல்வெளிகளையும், பூங்காவனத்தையும் தேடிப்போயிருக்கிறார் பாடல்களை எழுத! சிந்திப்பதற்கே இத்தனை விஷயங்கள் தேவைப்படும்போது அதை படமாக்க எத்தனை விஷயங்கள் தேவைப்படும்? அதற்கு தேவையான வசதிகள் அந்த இயக்குனர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டதா? அப்படி செய்து கொடுத்த பின் தான் அவை மோசமாக எடுக்கப்பட்டதா? இதையெல்லாம் ஆய்வு செய்யாமல் பொத்தாம் பொதுவாக இயக்குனர்களை குறை சொல்வது நேற்று வந்த கவிஞர்களுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால்,
கவிப்பேரரசுக்கு அழகல்ல...!

நன்றி: தமிழ்சினிமா.காம்

சோக கீதங்கள் - 1

1967-ல் வெளிவந்த "உப்கார்" என்ற படத்திலிருந்து, கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் ஓர் சோக கீதம்.

என் வீட்டுத் தோட்டத்தில்..!!









Friday, November 23, 2007

காதல் கீதங்கள் - 1

1960-களில் ரசிகர்களின் நெஞ்சங்களை பெரிதும் கவர்ந்த ஹிந்தி பாடல்களின் வரிசையில் முகமது ரபியின் குரலில் ஒலிக்கும் ஓர் அருமையான பாடல்.

ClickComments