Monday, August 18, 2008

கல்லறை தனிமை


New Page 1

மூச்சின்றி நகங்களால்

கல்லறையில் கீரிய

என் எண்ணம்!

புழுக்கள் தோய்ந்த

மிச்ச சதைநார்களில்

என் வெப்பம்!

உயிருடன் மூடப்பட்டு

குரல்வளை முறிந்த

என் கதறல்!

நிர்வாணமாய் இருளில்

யாருமற்ற பயத்தோடு

என் தனிமை!!

Tuesday, May 6, 2008

எனக்கான முத்தங்கள்


புன்னகித்த தருணங்கள்

எண்ணி - உன் வாசல்

கோலங்களின் புள்ளிகளோடு

மார்கழிப் பனித்துளிகளாய்

மரணித்துப் போன

நெஞ்சத்தின் நினைவுகள்,

உணர்வுத் துண்டுகளை

உயிர்கொண்டு விழுங்கியபோது

எனக்கான கயிற்றின்

முத்தங்கள் இதமாகியது!!

Monday, April 28, 2008

சத்தம் போடாதீர்!!

உதித்த துளி மாதங்களில்

உறங்கிப்போன சோகம்

அடைக்கிறது காற்றை

ஏன் இப்படி? எனக்கு மட்டும்!

புதைக்கப்போன காட்டில்

சவக்கற்கள் காட்டியது

ஆயிரம் அற்பாயுள்களை!

விதிப்பயனை வியந்தவாறு

விதைநிலத்தை முத்தமிட்டு

மனவரி(லி)களைப் பொறித்தேன்!

"சருகுகளே! சத்தம் போடாதீர்கள்!

பிஞ்சிலே துஞ்சிய என் காதல்

இங்கு கண்மூடி உறங்குகிறது"!

Sunday, April 20, 2008

ஈ-காதல்.காம்

அகநானூறறியாத பிரிவொன்றில்

வகையான வண்ணத்துப்பூச்சிகள்

பறக்கும் காதல் பூக்காடு!

உடலும் ஒட்டாத இக்காதலுக்கு

உன்னதங்கள் உண்டு!

காதலில் வளைவுகள் பொதுநியதி

தொலைவுகள் புதுநியதி!

விசைப் பலகையில்

இதயத்தின் இசைத்துடிப்பு

சுட்டெலியின் க்ளிக்குகளில்

முத்த மழைபொழிந்து

இறுதியாகும் இளவேனில்!

உறைந்த பிணமாய்

கணிப்பொறிமுன் தவம்கிடந்து

வெரித்தவிழியில் பனித்துளி!

அவள் உள்ளங்கை கதகதப்பு

என் கணிப்பொறிக்குமானது!

மதுவாக உள்நிறைந்த மாலைநேரங்கள்

மணித்துளியாய்ப் போனது!

Thursday, January 3, 2008

Kill bill - Bang Bang பாடல்

"Kill bill" படத்தில் வரும் எனக்குப் பிடித்த தலைப்புப் பாடல். நீங்கள் ரசிக்க இங்கே தருகிறேன்.

Thursday, December 27, 2007

என் குட்டிதேவதை


சொருகிய கண்களோடு

கருகிப்போன தன் சிறகுகளை

குப்பையில் தேடிக்கிடந்தாள்

என் குட்டிதேவதை!

பட்டினியிலொட்டிய ஓநாய்

வயிற்றுடனிருந்த அவளின்

வெளுத்த முகத்தின்

கண்ணீர்க் கோடுகளை

ஈக்கள் மொய்த்திருந்தன!

இதையெல்லாம் பார்த்தும்

பாராமல் செல்லும் நீ!

பூந்தளிர்மொட்டை மேயும்

புழுவாகப் போகக்கடவது!

Monday, December 24, 2007

மழையோடு உறவாடு



பனி முட்டைகளாய்

முற்றத்தில் வீழ்ந்தபோது

வினைப் பின்னமில்லா

விடலைப் பருவத்திலே

முத்துக்களாய் சேகரித்தேன்!

சன்னலில் சாறலாய்

முத்தங்கள் பதித்தபோது

உடைந்த துளிகள்

உலர் உள்ளத்தை

நனைத்தது உணர்ச்சியால்!

தோட்டத்தில் தூறலாய்

பூவிதழில் பொதிந்தபோது

தழுவாத தருணங்கள்

எண்ணிய தவிப்புகளெத்தனை!

சாப்ளின் சொன்னதுபோல்

உன்னோடு உறவாடும்போது

உப்புநீர் உமிழும்

என்றும் என் கண்ணோடு!

ClickComments