மூச்சின்றி நகங்களால்
கல்லறையில் கீரிய
என் எண்ணம்!
புழுக்கள் தோய்ந்த
மிச்ச சதைநார்களில்
என் வெப்பம்!
உயிருடன் மூடப்பட்டு
குரல்வளை முறிந்த
என் கதறல்!
நிர்வாணமாய் இருளில்
யாருமற்ற பயத்தோடு
என் தனிமை!!