Wednesday, February 17, 2010

துயரம்

மனக்குமுறலை
பேனாமுனையின் மைத்துளியாய்
கொட்ட நினைக்கிறேன்
ஏனோ அவை கண்ணீர்த்துளியாய்
கசிந்துகொண்டிருக்கின்றன.

Wednesday, February 10, 2010

மலர்களின் நிழல்கள்




மரத்தின் மலர்கள்
உதிர்த்த நிழல்கள்
தோட்டம் முழுவதும்
குப்பையாய் மண்டிக்கிடந்தன
தோட்டக்காரனை கூவி
பெருக்கச் சொன்னேன்

என்னவாயிற்று!
சூரியன் சாய்ந்ததும்
குண்டுமணி குப்பையில்லை
இனி நிலவு வந்ததும்
மாண்டுபோன நிழல்கள் மீண்டுவிடும்

-    சீனக்கவிஞர் ஸு ஷி (1037 – 1101)

ClickComments